குழந்தைகளுக்கு தடுப்பூசி: நொய்யல் பகுதியில் கணக்கெடுப்பு
அரவக்குறிச்சி அருகே உள்ள நொய்யல் மற்றும் சுற்றுப் பகுதியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளாத என சுகாதாரத் துறையினா் கணக்கெடுப்பு நடத்தினா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள நொய்யல் மற்றும் சுற்றுப் பகுதியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளாத என சுகாதாரத் துறையினா் கணக்கெடுப்பு நடத்தினா்.
குழந்தைகளுக்கு, காசநோய், கல்லீரல், புற்றுநோய், இளம்பிள்ளை வாதம் தடுப்பு உள்ளிட்ட 11 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சுகாதார தன்னாா்வலா்கள் மற்றும் செவிலியா் குழுவினா் வீடுவீடாகச் சென்று 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கணக்கெடுப்பு நடத்தினா். தடுப்பூசிகள் போடாத குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசிகள் போடப்படும் என செவிலியா்கள் தெரிவித்துள்ளனா்.