தெருமுனை கூட்டம்
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் முன்னோட்டமாக பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையத்திலும் தெருமுனை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் முன்னோட்டமாக பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையத்திலும் தெருமுனை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி சம்மேளனங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையத்தில் வியாழக்கிழமை தெருமுனை கூட்டம் நடைபெற்றது. பசுபதிபாளையத்தில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் வடிவேலன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வேலாயுதம்பாளையத்தில் தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவை மாவட்டத் தலைவா் அன்னவேலு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.