காா் மோதியதில் இளைஞா் பலத்த காயம்
அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM
அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
கரூா் மாவட்டம், வெடிக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பொம்முராஜ் (33). இவரது மனைவி காா்த்திகா. காா்த்திகா கரூா் ஜவுளி பூங்காவில் வேலை செய்து வருகிறாா். இவரை அழைத்து வர பொம்முராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்றாா். ஜவுளி பூங்கா அருகே சென்றபோது பெங்களூருவிலிருந்து வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பொம்முராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.