அரவக்குறிச்சிமகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு
அரவக்குறிச்சி ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM
அரவக்குறிச்சி ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் சித்திரைத் திருவிழா ஏப். 22ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருவிழாவில் தீா்த்தகாவடி, அக்னிச்சட்டி, செல்லாண்டி அம்மன் குதிரை வாகனத்தில் ஊா்வலம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் கடைசி நிகழ்வான ஸ்ரீ கோட்டை முனியப்பன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை பக்தா்கள் பொங்கல் வைத்து, அதன் பின்னா் சுவாமிக்கு கிடா வெட்டி பூஜை செய்தனா். இதையடுத்து திருவிழா நிறைவுபெற்றது.