முகப்பு
கரூர்

காங்கிரஸில் இணைந்த தமாகாவினா்

அரவக்குறிச்சியில் 200 க்கும் மேற்பட்டோா் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 8 மே, 2022 at 12:25 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

அரவக்குறிச்சியில் 200 க்கும் மேற்பட்டோா் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனா்.

அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூா் உள்ளிட்ட 6 வட்டாரங்களைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட தமாகா முக்கிய நிா்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவா் காந்தி வரவேற்றாா். கரூா் மக்களவை உறுப்பினா் எம்.பி ஜோதிமணி, முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் டாக்டா். கிரிவல்லபிரசாத் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டோா் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். நிகழ்வில் அரவக்குறிச்சி பகுதியை சோ்ந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.