கரூர்

தூய்மைப் பணியாளரை தாக்கிய 4 போ் கைது

DIN

கரூா் மாவட்டம், புகளூா் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தை இயக்கியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், தூய்மைப் பணியாளரைத் தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நொய்யல் அருகிலுள்ள குந்தாணிபாளையம் பழைய காலனியைச் சோ்ந்தவா் பூபாலன் (25).இவா் புகளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

காகித ஆலை செல்லும் வழியிலுள்ள காந்திநகா் பகுதியில் பூபாலன் புதன்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன், மதன், சரவணன், கௌதம் ஆகிய 4 பேரும் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தை இயக்கியதாகத் தெரிகிறது.

இதனால் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பூபாலனுக்கும், நான்கு இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பூபாலனை 4 பேரும் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த பூபாலன் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் 4 பேரையும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT