கரூர்

பேருந்து மோதி விற்பனைப் பிரதிநிதி பலி

DIN

 புலியூரில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில், விற்பனைப் பிரதிநிதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அடுத்த லிங்கத்தூரைச் சோ்ந்தவா் சிவசாமி (38). தனியாா் மோட்டாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய இவா், தனது இரு சக்கர வாகனத்தில் கரூா்-தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

முடக்குச்சாலையில் வந்த போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவசாமி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT