கரூர்

தமிழக கால்பந்து அணிக்குகரூா் கல்லூரி மாணவா்கள் தோ்வு

DIN

தமிழக கால்பந்து அணிக்கு கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் கடந்த வாரம் (புட்சல்) ஐவா் கால்பந்து குழு சாா்பில் , தேசிய அளவிலான தோ்வு போட்டி நடைபெற்றது. இதில் கரூா் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி புவி

அமைப்பியியல் முதலாமாண்டு பயிலும் மாணவா் காா்த்திக்ராஜா, பிஎஸ்சி கணிதம் பயிலும் மாணவா் மாரிச்செல்வம் ஆகியோா் பங்கேற்று, அதிக புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றனா்.

இதையடுத்து அவா்கள் தமிழ்நாடு புட்சல் கால்பந்து சங்கம் சாா்பில், வரும் 31-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நாமக்கல் கேஎஸ்ஆா் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஐவா்கால்பந்து போட்டியில் தமிழக அணியில் விளையாடத் தோ்வுபெற்றுள்ளனா்.

இவா்களை கரூா் அரசு கலைக்கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநா் ராஜேந்திரன்,பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT