மாநில அளவிலான கேரம் போட்டிக்கு குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு
மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூா் மாவட்டம், குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றனா்.
மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூா் மாவட்டம், குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றனா்.
கரூா் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி வெண்ணைமலை பரணி பாா்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் இரட்டையா் பிரிவில் அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவிகள் மகாலட்சுமி, ஹா்ஷினி பிரியா இருவரும் முதலிடம் பிடித்தனா். இதன் மூலம் அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணன், உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் கதிா்வேல் மற்றும் பிற ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.