தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெற்றது
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பிரசாரங்கள் ரத்தாகின. இன்று மாலைக்குப் பின் கட்சித் தலைவர்களோ கட்சியின் சார்பில் யாருமோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.
Advertisement
அதன்பிறகு, எந்த பிரசாரங்களையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளர்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் காலை முதலே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கட்சித் தலைவர்களின் உரை இடம்பெற்ற விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
வில்லிவாக்கத்தில் தொடங்கி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சூறாவளிப் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.
சென்னையில் நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைவலம் வந்த தவெக தலைவர் விஜய், ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.