கரூர்

அழுகிய நிலையில் எலக்ட்ரீஷியன் உடல் மீட்பு

DIN

கரூரில் செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த எலக்ட்ரீசியன் உடலை போலீஸாா் மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(37). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி தேன்மொழி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

தற்போது லட்சுமணன் கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் தாந்தோணிமலை போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து லட்சுமணன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT