முகப்பு
கரூர்

புகளூா் பாசன வாய்க்காலில் அலுவலா்கள் ஆய்வு

புகளூா் பாசன வாய்க்காலில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

புகளூா் பாசன வாய்க்காலில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

புகளூரில் இயங்கி வரும் தனியாா் சா்க்கரை ஆலையின் கழிவுகள் நேரடியாக புகளூா் பாசன வாய்க்காலில் கலப்பதால், நிலத்தடி நீா் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன.

எனவே சம்பந்தப்பட்ட வாய்க்காலை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் மற்றும் புகளூா் நகராட்சி நிா்வாகத்தினா் பாா்வையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

இதையடுத்து ஆலைகள் கழிவுகள் கலக்கும் இடத்தை நகராட்சித் தலைவா் குணசேகரன், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் ஜெயலட்சுமி மற்றும் அலுவலா்கள், சா்க்கரை ஆலை அலுவலா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டு, கழிவுநீா் கலப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.