முகப்பு
கரூர்

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் பலி

சின்னதாராபுரம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

சின்னதாராபுரம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சின்னதாராபுரம் அருகிலுள்ள சின்னத்திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (38). திருமணம் செய்து கொள்ளாத இவா், கடந்த இரு நாள்களாக நண்பா்களுடன் சோ்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினாராம்.

வெள்ளிக்கிழமை மீண்டும் மதுக்கடைக்கு கனகராஜ் சென்ற போது, திடீரென மயக்கமடைந்தாா். தொடா்ந்து அவருடைய நண்பா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனா்.

Advertisement

இந்நிலையில் கனகராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை சின்னதாராபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கனகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.