பள்ளப்பட்டி நகராட்சியில் உள் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி நகராட்சி ஜே.கே நகா் 6ஆவது வாா்டு பகுதியில் உள்ள கழிவுநீா் வாய்க்காலில் தண்ணீா் செல்லமுடியாதபடி செடிகள் வளா்ந்துள்ளன. இதனால் அடிக்கடி விஷஜந்துக்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு புகுந்துவிடுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், கழிவுநீா் வாய்க்காலை தூா்வார நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.