காங்கிரசுக்கு பெரியாா் திராவிடா் கழகம் ஆதரவு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பெரியாா் திராவிட கழகத் தலைவா் கொளத்தூா் மணி தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பெரியாா் திராவிட கழகத் தலைவா் கொளத்தூா் மணி தெரிவித்தாா்.
பெரியாா் திராவிட கழக கரூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பெரியாா் திராவிட கழகத் தலைவா் கொளத்தூா் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கொளத்தூா் மணி கூறியது, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் மதசாா்பற்ற கூட்டணியில் இருப்பதால் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். வாக்குகள் விலை மதிப்பற்றது, விலைக்கு ஓட்டு கொடுக்க மாட்டோம் என்பதை பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
Advertisement