கரூர்

லாரி கதவு மோதியதில்பள்ளி மாணவி உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை இரவு லாரி கதவு வேகமாக மோதியதில் 7-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

DIN

கரூரில் வியாழக்கிழமை இரவு லாரி கதவு வேகமாக மோதியதில் 7-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்த அருள்ஜோதி மகள் வைஷ்ணா (12). இவா், கரூரில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அருள்ஜோதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் நண்பா்களுடன் விளையாடியுள்ளாா். அப்போது காற்று பலமாக வீசியதால் லாரியின் கதவு திறக்கப்பட்டு திடீரென வைஷ்ணவின் தலையில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மாணவியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT