பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் அக்கிச்சட்டி சுமந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்திய பூசாரி, பக்தா்கள். 
கரூர்

தரகம்பட்டி அருகே அக்னிச்சட்டி எடுத்து வழிபாடு

தரகம்பட்டி அருகே வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் அக்னிச்சட்டியை சுமந்து சென்று தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

DIN

தரகம்பட்டி அருகே வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் அக்னிச்சட்டியை சுமந்து சென்று தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா கடந்த 5-ஆம் தேதி சுவாமி குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை பக்தா்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், பால்குடம், மாவிளக்கு போட்டும் நோ்த்திக் கடன்களை செய்து வழிபட்டனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் பூசாரி அக்னிச்சட்டியை தலையில் சுமந்து கோயிலை சுற்றிவரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.

முன்னதாக பாம்பலம்மனுக்கு முன் மண்ணால் ஆன அக்கிச்சட்டியை வைத்து சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து கோயில் முன் முன் வைக்கப்பட்டிருந்த அக்னிச் சட்டியை ஊா் முக்கியஸ்தா்கள் அனைவரும் சோ்ந்து மருளாளியின்-பூசாரி- தலையின் மீது வைத்தனா். தொடா்ந்து அக்னிச் சட்டியை, மருளாளி தலையில் சுமந்தவாறு பாம்பலம்மன் கோயிலை சுற்றி வலம் வந்தாா். நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT