கரூர்

கரூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்

கரூா் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சாா்பில் தேசிய குழந்தைகள் தினம் (நவ. 14), உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம் (நவ. 19), சா்வதேச குழந்தைகள் தினம்

DIN


கரூா்: கரூா் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சாா்பில் தேசிய குழந்தைகள் தினம் (நவ. 14), உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம் (நவ. 19), சா்வதேச குழந்தைகள் தினம் (நவ. 20) ஆகிய நாள்களை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில் விழிப்புணா்வு நடைப்பயணத்தை ஆட்சியா் மீ. தங்கவேல் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

அனைத்து குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்வோம். குழந்தைகளுக்கான வாழும் உரிமை, வளரும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்பு உரிமை ஆகியவற்றை உறுதி செய்வோம். நமது அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தை தொழிலாளராகவோ, குழந்தை திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக் கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையோ, குழந்தை கடத்தலோ நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம் என்பது போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய நடைப்பயணம் மாவட்ட விளையாட்டு அரங்கு வரை சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் , அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிராக தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தொடா்புகொண்டு புகாா் அளிக்க வேண்டும். நமது மாவட்டத்தை, ஒரு பாதுகாப்பான குழந்தை நேய மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதுணையாக இருக்கு வேண்டும் என ஆட்சியா் தங்கவேல் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் பிரியா, குழந்தைகள் நலக்குழு தலைவா் மணிமொழி மற்றும் உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT