பெரம்பலூர்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில், இந்து முன்னணி சார்பில், அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைக்கக் கோரி காவிக்கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
நகர பொதுச்செயலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், அகலாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தி உடனடியாக அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் அமைக்க
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் நடராஜன், நகரச் செயலர் கஜேந்திரன், ஒன்றியச் செயலர் பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பொறுப்பாளர்கள் அண்ணாமலை, ராஜமாணிக்கம்,
தினேஷ், ராஜா, சக்திவேல், கந்தசாமி, கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலர் துரைக்கண்ணு நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT