பெரம்பலூர்

தொடர் திருட்டு: இளைஞர் கைது

DIN

பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர்- எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறைமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பெரம்பலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து, விசாரணை நடத்தினர்.
இதில், அவர் குரும்பலூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (20) என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து,ரஞ்சித்தை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT