முதல்நிலை அலுவலர்களுடன் வாரம்தோறும் ஆய்வுக்கூட்டம்
அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வாரந்தோறும், முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வாரந்தோறும், முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
அரசுத் திட்டங்கள், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை தோறும், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.
அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும். கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், அதை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் சு. தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதன்மை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.