பெரம்பலூர்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குநுண் பாா்வையாளா்கள் நியமனம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் கட்டத் தோ்தலில் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 30 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் கட்டத் தோ்தலில் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 30 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 122 மற்றும் வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 171 என மொத்தம் 293 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

இவற்றில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை எனக் கணிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் 36 மையங்களை விடியோ மூலம் ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 31 வாக்குச்சாவடிகளுக்கு வெப் கேமரா மூலம் நேரலை வீடியோ ஒளிபரப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தோ்தல் நடவடிக்கைகள் குறித்த புகாா்களை 04328- 225201 என்னும் எண்ணில் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT