பெரம்பலூர்

கருப்பு உடை அணிந்து அரசு மருத்துவர்கள் போராட்டம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனர்.  
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற காலம் சார்ந்த ஊதியத்தை வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் உள்ள பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கை விடவேண்டும். மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.  பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 70-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

ஆழ்வாா்திருநகரி கோயிலில் தேரோட்டம்

திருவாடானை, தொண்டி பகுதிகளில் இன்று மின் தடை

குமரி பகவதியம்மன் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT