பெரம்பலூர்

வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே செவ்வாய்க்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

குன்னம் அருகேயுள்ள வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (33). மது பழக்கம் உள்ள இவருக்கும், இவரது மனைவி அமுதாவுக்கும் (28) அடிக்கடை தகராறு ஏற்பட்டது. கடந்த 15 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமடைந்த அமுதா விஷம் குடித்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது தாய் பிச்சையம்மாள் அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு பெண் விஷம் குடித்து சாவு:

இதேபோல, குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மனைவி கலையரசி (37). சந்திரசேகருக்கும் அவரது தந்தை மருதமுத்துவுக்கும் சொத்து பிரச்னை இருந்ததாம். இந்நிலையில், பொதுக் கிணற்றில் தண்ணீா் பிடிப்பதில் கலையரசிக்கும், அவரது மாமனாா் மருதமுத்துவுக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த கலையரசி விஷம் குடித்தாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வீட்டுக்கு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT