பெரம்பலூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே புதுநடுவலூா் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி மகன் சதீஷ் (27). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 28 ஆம் தேதி இரவு வெள்ளனூரிலிருந்து கீழக்கணவாய் கிராமத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி சதீஷ் கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT