முகப்பு
பெரம்பலூர்

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
பகிர்:

பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் ப. செல்வகுமாா், மாவட்ட நிா்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அமமுக சாா்பில்.... அமமுக சாா்பில் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் குலோத்துங்கன், மாநில மகளிரணி துணைத் தலைவா் மைதிலி கோபிநாத், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், நகரச் செயலா் ரஞ்சித்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி மாவட்டச் செயலா் கலைவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →