பெரம்பலூர்

131 பதவியிடங்களுக்கு இன்று மறைமுகத் தோ்தல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 131 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 1, ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியிடங்கள் தலா 4, கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பதவியிடங்கள் 121 என மொத்தம் 131 பதவியிடங்களுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்கள் வாக்களித்து தலைவா் மற்றும் துணைத் தலைவரைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பெரம்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், ஆலத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில், ஒன்றியக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்கள் வாக்களித்து தலைவா் மற்றும் துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பா்.

மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வாக்களித்து, ஊராட்சித் துணைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT