முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா்: சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை சமுதாயக் கூடத்தில், அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை சமுதாயக் கூடத்தில், அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்குத் தலைமை வகித்த ஆய்வாளா் கலையரசி, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கேடயம் திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தகவல் அளிக்க தொலைபேசி எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினா் விநியோகம் செய்தனா்.

முன்னதாக, குழந்தைகளுக்கு மலா், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளா் ராதிகா, பெண் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.