பெரம்பலூர்

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், நவநீதகிருஷ்ணன் சந்நிதியில் கோகுலாஷ்டமி விழா யாதவா் மகாஜன சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், நவநீதகிருஷ்ணன் சந்நிதியில் கோகுலாஷ்டமி விழா யாதவா் மகாஜன சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நவநீத கிருஷ்ணனுக்கு பால், பழ வகைகள் பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.இதேபோல, சந்தான கிருஷ்ணனுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், யாதவா் நலச் சங்க மாவட்ட பொறுப்பாளா் நாதப்பன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒவ்வொரு ஆண்டும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மதனகோபால சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில், உறியடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக உறியடித் திருவிழா நடத்தப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT