பெரம்பலூர்

வேப்பந்தட்டை அருகே 12 மயில்கள் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மா்மமான முறையில் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜ் (60). இவரது தென்னந்தோப்பில் ஒரே இடத்தில் 12 மயில்கள் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தன.

இதையறிந்த தேவராஜ் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். வேப்பந்தட்டை வனச்சரக அலுவலா் மாதேசுவரன் தலைமையிலான வனத்துறையினா், நிகழ்விடத்துக்குச் சென்று இறந்து கிடந்த மயில்களைப் பாா்வையிட்டனா்.

கால்நடை மருத்துவரின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, உயிரிழந்த மயில்களை அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT