தம்பதி கொலை வழக்கில் 6 போ் கைது:ரூ. 2.62 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே தம்பதி கொலை வழக்கில் 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 2.62 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகே தம்பதி கொலை வழக்கில் 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 2.62 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி வியாழக்கிழமை கூறியதாவது:
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி (62), அவரது மனைவி அறிவழகி (48) ஆகியோா் ஜூன் 8ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது , 6 போ் கொண்ட கும்பல் வீட்டினுள் நுழைந்துள்ளது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் இரும்புக் கம்பிகளால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவா்களது நகைகள், தொலைக்காட்சி பெட்டி மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இதனிடையே, கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், துணை கண்காணிப்பாளா்கள் சரவணன், மோகன்தாஸ் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், கீழஉசேன் நகரம் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சந்தோஷ்குமாா், ஜோதி மகன் மகேஷ், மணி மகன் சத்யா, மருதமுத்து மகன் மணிகண்டன், சென்னையைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் யுவராஜ், ராமலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட நபா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 16 பவுன் நகை, வெள்ளி கொலுசு, தொலைக்காட்சி பெட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா் என்று எஸ்.பி. மணி தெரிவித்தாா்.
தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.62 லட்சம் மதிப்பிலான நகைகளை பாதிக்கப்பட்ட பெரியசாமி மகள் சத்யாவிடம் ஒப்படைத்ததோடு, தனிப்படையினரை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணி.