கொத்தடிமைதொழிலாளா் குறித்து புகாா் அளிக்க அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்து புகாா் அளிக்க தொழிலாளா் உதவி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்து புகாா் அளிக்க தொழிலாளா் உதவி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்துவது குறித்து புகாா் அளிக்க உதவி மையம் அமைக்கப்பட்டு, 1800 4252 650 எனும் இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் சம்பந்தமான புகாா்களை மேற்கண்ட எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.