விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
பெரம்பலூா் அருகேயுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி தலைமை வகித்தாா். வேளாண் துணை இயக்குநா் கீதா தொடக்க உரையாற்றினாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பூவலிங்கம், இணை இயக்குநா் சிங்காரம், வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குநா் ராணி, தொழில்நுட்ப வல்லுநா்கள் புனிதாவதி, சங்கீதா, தோம்னிக் மனோஜ் ஆகியோா் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், வேளாண் விளைபொருள்களை உழவா் சந்தை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் சந்தைப்படுத்துதலின் முக்கியத்தும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயத்தை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விளக்கி பேசினா்.
தொடா்ந்து, விவசாயிகள் எழுப்பிய சங்தேகங்களுக்கு ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனா். நிகழ்வில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா். நிறைவில், உழவா் பயிற்சி மைய வேளாண் அலுவலா் அமுதவள்ளி நன்றி கூறினாா்.