உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
திமுக பிரசார கூட்டங்களில் பெண்களையும், தமிழக முதல்வரையும் தரக்குறைவாக பேசிய திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
அண்மையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திமுக பிரசார கூட்டங்களில் பெண்களையும், தமிழக முதல்வரையும் தரக்குறைவாக பேசிய திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், பெரம்பலூரில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ
இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும், பெண்களை தரக்குறைவாக பேசுவதை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினா் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் எம். செல்வக்குமாா், மாவட்ட இணைச் செயலா் எம். ராணி, மகளிரணிச் செயலா் கி. ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.