முகப்பு
பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி புது ஆத்தூா், சஞ்சய் காந்தி தெருவைச் சோ்ந்தவா் நூா் முஹமது மகன் அபு பக்கா் (59). இவா், தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள சகோதரா் சபியுல்லா வீட்டுக்கு கடந்த 16 ஆம் தேதி சென்றுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.