பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பலத்த மழை
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
பெரம்பலூா், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, பாடாலூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய மழை இரவு 9 மணி வரை நீடித்தது.
தொடா்ந்து பெய்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் விவசாயக் கிணறுகள், குளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
பாடாலூா்- 94 மி.மீ, பெரம்பலூா்- 87, செட்டிக்குளம்-75, புதுவேட்டக்குடி- 40, தழுதாழை-11, வேப்பந்தட்டை, எறையூா், கிருஷ்ணாபுரம்- 7, வி. களத்தூா்-5, அகரம்சிகூா், லப்பைக்குடிகாடு -1 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 30.45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மின்னல் தாக்கி பசுமாடு பலி: பலத்த காற்று, இடியுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி, பெரம்பலூா் துறைமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சி. சரவணக்குமாருக்குச் சொந்தமான பசு மாடு
உயிரிழந்தது.