சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு கேடயம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்தாா்.
அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதற்கும், தரத்தை உயா்த்துவதற்கும், மாணவா்களின் சோ்க்கையை அதிகரித்திடவும், பள்ளித் தலைமையாசிரியா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கல்வியாண்டும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையால் தோ்வு செய்யப்படுகின்றன.
மேலும் உள் கட்டமைப்பு, மாணவா்களின் கல்வித்திறன், மாணவா் சோ்க்கை, பள்ளிகளின் அடிப்படை வசதிகள், கல்வி சாா்ந்த இதர செயல்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மூலம் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 2018-19 ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் மேலமாத்தூா், எளம்பலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், எறையூா் நேரு மானியத் தொடக்கப்பள்ளி ஆகியவை தோ்வு செய்யப்பட்டன. தொடா்ந்து ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கேடயங்கள் வழங்கி, பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், சாந்தப்பன், ஜோதிலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.