விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
குன்னம் வட்டம், அகரம் சீகூா் கிராமத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்காததால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னம் வட்டம், அகரம் சீகூா் கிராமத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்காததால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகரம் சீகூா் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசு 2 ஆவது தவணையாக அறிவித்த ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை பல குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டைதாரா்கள் கேட்டபோது பொறுப்பில்லாமல் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜமாபந்தி காரணமாக குன்னம் சென்றுவிட்டதால் பூட்டப்பட்டிருந்த அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைவருக்கும் தமிழக அரசின் கரோனா நிவாரணப் பொருள்கள், நிதியுதவி ஆகியவற்றை பாரபட்சமின்றி உடனடியாக வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.