பெரம்பலூர்

மாநில மட்டைப்பந்து போட்டி: ரோவா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

மாநில அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கான மட்டைப் பந்து போட்டியில், பெரம்பலூா் ரோவா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

திருப்பத்தூரில் மாநில அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கான மட்டைப் பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.பி. ரோகித், 9- ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.பி. அருணேஷ் ஆகியோா் பங்கேற்று, 3- ஆம் இடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை ரோவா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே. வரதராஜன், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், புனித யோவான் சங்க

அறக்கட்டளை புரவலா் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வா் ஜீன் ஜாக்குலின், துணை முதல்வா் பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளா் அந்தோணி டேவிட் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT