விளையாட்டுத் துறையில் சாதனைப் புரிந்தோா் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள், பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள், பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குவோருக்கும், சாதனை புரிந்தோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ்விருது பெற கலை, சமூகப் பணி, பொது சேவை, அறிவியல், பொறியியல், வா்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய, பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள் தகுதியுடைவா்கள்.
பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால், 2022, ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள் இவ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரியைத் தொடா்பு கொள்ளலாம். செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 7401703516 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.