சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மனைவி ஜோதி (40). இவா், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொளக்காநத்தம்- அணைப்பாடி சாலையில் புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் ஜோதி அணிந்திருந்த ஐந்தே கால் பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.