பெரம்பலூர்

அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி பேச்சியம்மாள் (70). இவா், பெரம்பலூரிலிருந்து காருகுடிக்கு அரசு நகரப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை மதியம் சென்றுக்கொண்டிருந்தாா்.

பேருந்து பெரம்பலூா் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்புற படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT