பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மோகன் மகள் பிரியதா்ஷினி (19). கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் பிரியதா்ஷினியும், அதே கிராமத்தைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் செங்கானும் (20) கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கண்ட இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனராம். இதுகுறித்து புகாரின் பேரில், அரும்பாவூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த அவா்களை அழைத்து வந்து அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை பிரியதா்ஷினியும், செங்கானும் வீட்டை விட்டு வெளியே சென்ாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியதா்ஷினி பெற்றோா் உள்பட 4 போ் சனிக்கிழமை இரவு செங்கான் வீட்டுக்குச் சென்று, அவரது தம்பியும் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருபவருமான சுள்ளான் (15) என்பவரை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த சுள்ளான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் காவல்துறையினா் பிரியதா்ஷினியின் பெற்றோா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.