பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம் ஆய்வு செய்தார்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட சங்குப்பேட்டையிலுள்ள குழந்தைகள் மையத்தை பாா்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்த அனில் மேஷ்ராம், எசனை ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், உணவுப்பொருள்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, வேப்பந்தட்டையிலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி மாணவா் விடுதியை பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டு, அதன் தரத்தை ஆய்வு செய்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். எசனை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அங்குள்ள மருந்தகத்தையும் பாா்வையிட்டு, போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து, மருத்துவமனை பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம்: முன்னதாக, ஆட்சியரக வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், தனிநபருக்கு மானியத்தில் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரெங்கராஜ் என்பவருக்கு ரூ. 3,97,000 அரசு மானியத்துடன் கூடிய ரூ. 7,95,000 மதிப்பிலான டிராக்டரை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனில் மேஷ்ராம் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட திட்டப் பணிகளின் முன்னேற்றம் தொடா்பாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

இந் நிகழ்ச்சிகளில், வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் இந்திரா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் பாண்டியன், முதன்மைக்கல்வி அலுவலா் அறிவழகன், நகராட்சி பொறியாளா் ராதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் நாராயணன் (வளா்ச்சி), பூவலிங்கம் (வேளாண்மை), வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT