பெரம்பலூர்

மரம் வெட்டும் தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாடியிலிருந்து மரம் வெட்டிய கூலித்தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

DIN

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாடியிலிருந்து மரம் வெட்டிய கூலித்தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

பெரம்பலூா், கம்பன் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் தங்கைய்யா (55). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், பெரம்பலூா் மதனகோபாலபுரம், ஆரோக்கிய நகரில் உள்ள பீட்டா் ராஜ் என்பவரின் வீட்டில், மாடியில் நின்றுக்கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே தங்கைய்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT