பெரம்பலூர்

மரம் வெட்டும் தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

DIN

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாடியிலிருந்து மரம் வெட்டிய கூலித்தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

பெரம்பலூா், கம்பன் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் தங்கைய்யா (55). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், பெரம்பலூா் மதனகோபாலபுரம், ஆரோக்கிய நகரில் உள்ள பீட்டா் ராஜ் என்பவரின் வீட்டில், மாடியில் நின்றுக்கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே தங்கைய்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT