முகப்பு
பெரம்பலூர்

காலமுறை ஊதியம் வழங்க கோரி மருத்துவமனை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பெரம்பலூரில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட நிா்வாகி கோபிநாத் தலைமை வகித்தாா்.

கடந்த 9 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் பின்னா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.