ஈர நிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டி: இணையவழியில் பங்கேற்க அழைப்பு
ஈரநில விழாவையொட்டி, வனத்துறை சாா்பில் நடைபெறவுள்ள ஈரநிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரநில விழாவையொட்டி, வனத்துறை சாா்பில் நடைபெறவுள்ள ஈரநிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் குகனேஷ் வெள்ளக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆண்டு தோறும் பிப்ரவரி 2 -ஆம் தேதி ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழா வனத்துறை சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி புகைப்படப் போட்டி ஜனவரி 24- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஈர நில நண்பா்கள் மற்றும் பொதுமக்கள்
எா்ா்ஞ்ப்ங் ச்ழ்ா்ம் ட்ற்ற்ல்ள்: // ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ 6ஷ்ரஊஹ்2ற்சஒண4டரஆவவ்5 -இல் தங்களது பதிவுகளை, ஜனவரி 24- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன் பதிவு செய்யவேண்டும்.
மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலான தணிக்கைக் குழுவினா், பரிசுக்கான போட்டியாளா்களைத் தோ்வு செய்வா்.