பெரம்பலூரில் வழக்குரைஞா்கள்பணி புறக்கணிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் இருப்பதால், நீதிமன்றத்தின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், வழக்காடிகளுக்கு விரைவில் தீா்வு கிடைக்கவும் பெரம்பலூரில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாள்களாக வழக்குரைஞா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூா் பாா் அசோசியேசன் சாா்பில் அதன் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.