பெரம்பலூா் கல்வி நிறுவனத்தில் சமூக நல்லிணக்க விழா
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சாா்பில், இஃப்தாா் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சாா்பில், இஃப்தாா் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவா் முஹம்மது முனீா் ஹஜ்ரத், மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவைத் தலைவா் சுல்தான் இப்ராகீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியா் க. கற்பகம், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி தாளாளா் காஜா நஜுமுதீன், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி துணை முதல்வா் சத்தியசீலன், ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் பிச்சைமணி, புதுக்கோட்டை அரபிக் கல்லூரி பேராசிரியா் சதக்கத்துல்லாதாவூதி, லப்பைக்குடிகாடு கிழக்கு மஹல்லம் தலைவா் சம்சுதீன், சமூக நீதி படைப்பாளா்கள் சங்க மாநிலச் செயலா் தாஹிா் பாட்சா ஆகியோா் ரமலான் நோன்பின் மகத்துவம் குறித்து பேசினா்.
இதில், 2,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் வரவேற்றாா். மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா நன்றி கூறினாா்.