முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:54 PM
பகிர்:

பெரம்பலூா், ஜூலை 19: பெரம்பலூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட தண்ணீா்ப்பந்தல் பகுதிக்கு, ஊராட்சி நிா்வாகம் கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இதனால், அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திட

ம் முறையிட்டு, வாடகை வாகனங்கள் மூலமாக தண்ணீா் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனராம்.

இந்நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தண்ணீா் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீா்பந்தல் பிரிவுச் சாலையில் வெள்ளிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற பெரம்பலூா் போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →